LyricFront

Aa Neethiyull Karthare

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆ நீதியுள்ள கர்த்தரே வெளி வறண்டதாலே எச்சீவனும் வதங்குதே. இத் துன்பம் எங்களாலே நடந்த பாவத்தின் பலன் என்றெங்களில் அவனவன் துக்கித்துச் சொல்ல வேண்டும்.
Verse 2
ஆ எங்கள் மீறுதல்களை இரக்கமாய் மன்னியும் நீரே அடியார் நம்பிக்கை. சகாயத்தை அளியும்; கர்த்தாவே சுத்த தயவால் மழையைத் தந்து அதினால் நிலத்தைப் பூரிப்பாக்கும்.
Verse 3
தயாபரா நீர் உமது உடன்படிக்கைக்காக ரட்சித்து காய்ந்த பூமிக்குத் தண்ணீர் இறைப்பீராக; ஆகாயத்தின் கர்த்தரே நீரே மழையை உம்மை அன்றியே யார் பெய்யப் பண்ணக்கூடும்.
Verse 4
மூச்சற்ற விக்ரகங்களால் ஆகாதே; தேவரீரே பாரத்தை உமது கையால் விரித்தீர்; அதில் நீரே அளவில்லாமல் ஆள்பவர்; நீரே பிதா நீர் ரட்சகர்; உம்மாலே யாவும் ஆகும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?