LyricFront

Aa Yennil Nooru Vaayum Naavum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆ என்னில் நூறு வாயும் நாவும் இருந்தால் கர்த்தர் எனக்கு அன்பாகச் செய்த நன்மை யாவும் அவைகளால் பிரசங்கித்து துதிகளோடே சொல்லுவேன் ஓயா தொனியாய்ப் பாடுவேன்.
Verse 2
என் சத்தம் வானமளவாக போய் எட்ட வேண்டும் என்கிறேன்; கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்; ஒவ்வொரு மூச்சும் நாடியும் துதியும் பாட்டுமாகவும்.
Verse 3
ஆ என்னில் சோம்பலாயிராதே என் உள்ளமே நன்றாய் விழி; கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே கருத்துடன் இஸ்தோத்திரி; இஸ்தோத்திரி என் ஆவியே இஸ்தோத்திரி என் தேகமே.
Verse 4
வனத்திலுள்ள பச்சையான எல்லா வித இலைகளே வெளியில் பூக்கும் அந்தமான மலர்களின் ஏராளமே என்னோடே கூட நீங்களும் அசைந்திசைந்து போற்றவும்.
Verse 5
கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும் கணக்கில்லா உயிர்களே பணிந்து போற்ற உங்களுக்கும் எந்நேரமும் அடுக்குமே; துதியாய் உங்கள் சத்தமும் ஓர்மித் தெழும்பி ஏறவும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?