என்ன கொடுப்பேன் நான் உமக்கு
என்ன கொடுப்பேனோ ?
என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
Verse 2
ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
நோவாவைப் போல் தகனபலியினையோ
ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
Verse 3
ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்
தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
Verse 4
சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே
என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ?
Verse 5
என்னையே நான் தருகின்றேன் (2)
என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ?