ஓ பெத்லகேமே சிற்றூரே
என்னே உன் அமைதி
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான்வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.
Verse 2
கூறும் ஓ விடி வெள்ளிகாள்
இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே
பாரில் அமைதியாம்;
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண் மாந்தர் தூக்கத்தில்
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்
Verse 3
அமைதியாய் அமைதியாய்
விண் ஈவு தோன்றினார்
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்
அமைதியால் ஈவார்
கேளாதே அவர் வருகை
இப்பாவ லோகத்தில்;
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
தம் சாந்த ஆன்மாவில்
Verse 4
வேண்ட நற் சிறு பாலரும்
இத் தூய பாலனை
அழைக்க ஏழை மாந்தரும்
இக்கன்னி மைந்தனை
விஸ்வாசமும் நம் பாசமும்
வரவைப் பார்க்கவே
இராவை நீக்கித் தோன்றுவார்
இம்மாட்சி பாலனே.
Verse 5
பெத்லெகேம் தூய பாலனே
இறங்கி வருவீர்;
ஜனிப்பீர் எங்களில் இன்றும்
எம் பாவம் நீக்குவீர்;
நற்செய்தி இவ்விழாதன்னில்
இசைப்பார் தூதரே;
ஆ வாரும் வந்து தங்கிடும்
இம்மானுவேலரே.
Verse 1
O bethleheme sitrure
Ennae un amaithi
Ayarnthae niththirai seigaiyil
Urnthidum vaanvelli
Vin vaazhvin jothi thondrittae
Un veethiyil indrae
Nallor naattam pollaar kottam
Un baalan yesuvae.
Verse 2
Koorum o vidi velligaal
Immainthan janmamae
Vin vaentharkku magimaiyae
Paaril amaithiyaam;
Maa thivviya baalan thondrinaar
Mann maanthar thookkaththil
Vizhiththirukka thhootharum
Anbodu vaanaththil