என்னை விடாதேயும்
கர்த்தாவே மோட்சம் மட்டும்
உமது கைகளால்
இப்பிள்ளையை நடத்தும்
மகா இரக்கமாய்;
நீர் என் வெளிச்சமும்
என் பாதுகாப்புமே
என்னை விடாதேயும்.
Verse 2
என்னை விடாதேயும்
நான் பாவத்தில் விழுந்து
கெடாப்படிக்கு நீர்
ஒத்தாசையாய் இருந்து
நீர் உமதாவியால்
என்னைத் திடத்தவும்
அன்புள்ள கர்த்தரே
என்னை விடாதேயும்.
Verse 3
என்னை விடாதேயும்
என்றும்மைக் கருத்தாக
நான் கெஞ்சிக் கேட்கிறேன்.
பிசாசு பலமாக
என்னை நெருங்கினால்
நீர் துணையாயிரும்
என் சோதனைகளில்
என்னை விடாதேயும்.
Verse 4
என்னை விடாதேயும்
அன்பாக என்னைப் பாரும்;
என் கையின் வேலையை
ஆசீர்வதித்து வாரும்;
நீர் கற்பித்தபடி
எல்லாம் நான் செய்யவும்
என் வேலை வாய்க்கவும்;
என்னை விடாதேயும்.
Verse 5
என்னை விடாதேயும்
உமக்குச் சொந்தமாகப்
பிழைத்து என்றைக்கும்
நான் விசுவாசமாக
உம்மில் நிலைக்கவே
என்னைக் காத்தருளும்;
கடை இக்கட்டிலும்
என்னை விடாதேயும்.
Verse 1
ennai vidaatheeyum
karththaavae motcham mattum
umathu kaigalal
ippillaiyai nadaththum
mahaa irakkamai;
neer en velichchamum
en paathukaappumae
ennai vidaatheeyum.